14th June 2024 08:09:37 Hours
பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு உதவும் நோக்கில் 56 வது காலாட் படைப்பிரிவின் 12 (தொ) விஜயபாகு காலாட் படையணியினால் 09 ஜூன் 2024 அன்று வவுனியா காக்கியன்குளம் முஸ்லிம் மகா வித்தியாலத்தில் மருத்துவ முகாம் ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டது.
மறுமலர்ச்சி மற்றும் மீள்குடியேற்ற உதவி அமைப்பின் செயலாளர் கலாநிதி வேலாயுதம் சர்வேஸ்வரன் அவர்களின் பங்களிப்பில் இரண்டு கட்டங்களின் கீழ் இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 290 பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இரண்டாம் கட்டத்தில், 52 நோயாளிகள் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
56 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் 562 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டிஎம்எஸ்ஜே தென்னகோன் ஆர்எஸ்பீ மற்றும் 12 (தொ) விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரி மேஜர் கம்லத்கே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் 56 வது காலாட் படைப்பிரிவு தளபதி, மறுமலர்ச்சி மற்றும் மீள்குடியேற்ற உதவி அமைப்பின் பணியாளர்கள், 56 வது காலாட் படைப்பிரிவின் கேணல் ஒருங்கிணைப்பு, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.