15th May 2024 18:13:51 Hours
வவுனியா பிரதேசத்தின் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் நோக்கில் 562 வது காலாட் பிரிகேடின் 17 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி 12 மே 2024 அன்று இராஜேந்திரகுளம் தமிழ் கலவன் பாடசாலையில் கண் மருத்துவ முகாமினை ஏற்பாடு செய்திருந்தது.
382 பார்வை குறைபாடு உள்ள நோயாளிகள் கண் பரிசோதனை செய்து பயனடைந்தனர். மேலும், கண் சிறப்பு மருத்துவரின் மதிப்பீட்டின் கீழ் நோயாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற உதவி அமைப்பின் செயலாளர் வைத்தியர் வேலாயுதம் சர்வேஸ்வரன் அவர்களின் பங்களிப்போடு முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், யாழ். போதனா வைத்தியசாலையின் கண் பிரிவு அதிகாரிகள், விஷன் கேயர் (பிரைவேட்) லிமிடெட் பணியாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.