06th June 2024 15:20:07 Hours
56 வது காலாட் படைப்பிரிவு படையினர் 02 ஜூன் 2024 அன்று பன்றிகேற்றகுளம் பாடசாலையில் கண் மருத்துவ பரிசோதனை திட்டத்தை ஏற்பாடு செய்தனர். சமூக நலம் சார்ந்த இத்திட்டத்தில் 366 பார்வை குறைபாடுள்ளவர்கள் கண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். முதற்கட்டமாக 138 பேருக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. மேலும் கண் வைத்திய நிபுணரால் 45 நோயாளிகள் கண்புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். மருத்துவ முகாமில் பரிசோதனைக்கு வருகை தந்தவர்களுக்கு படையினர் சிற்றுண்டி வழங்கினர்.
மறுமலர்ச்சி மற்றும் மீள்குடியேற்ற உதவி அமைப்பின் செயலாளர் வைத்தியர் வேலாயுதம் சர்வேஸ்வரன் அவர்களின் உதவியில் 56 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் மறுமலர்ச்சி மற்றும் மீள்குடியேற்ற உதவி அமைப்பின் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.