22nd November 2024 07:57:40 Hours
56 வது காலாட் படைப்பிரிவினர் இலங்கை ஹதபிம அதிகாரசபையுடன் இணைந்து நெடுங்கேணி மற்றும் பாலிநகரில் வசிக்கும் 150 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு கோழி குஞ்சுகள், காய்கறி கன்றுகள் மற்றும் விவசாய கருவிகளை 19 நவம்பர் 2024 அன்று விநியோகித்தனர்.
இம்முயற்சியானது 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் எம்பீஎம்என் முத்துமால யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 561 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி பாலிநகரில் உள்ள 75 குடும்பங்களுக்கு இந்த பொருட்களை வழங்கியதுடன், 16 வது இலங்கை சிங்க படையணி நெடுங்கேணி வடக்கு கிராம சேவையாளர் பிரிவின் 75 குடும்பங்களுக்கு இந்த வளங்களை வழங்கியது.
இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.