24th April 2024 17:41:32 Hours
2024 ஏப்ரல் 20 அன்று சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய புத்தாண்டு விழாவை வவுனியா பொது மைதானத்தில் 56 வது காலாட் படைப்பிரிவினர் பொது மக்களின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்தனர்.
விழாவில் பாரம்பரிய நிகழ்வுகள் மற்றும் சைக்கிள் ஓட்டம், மரத்தன்,அழகு ராணி-ராஜா தேர்வு, கயிறு இழுத்தல், தலையணை சண்டை, கோலம் போடுதல் போட்டி, யானைக்கு கண் வைத்தல், பனிஸ் சாப்பிடுதல், தேங்காய் திருவுதல் இசை நாற்காலி விளையாடுதல், சமநிலை ஓட்டம் மற்றும் பல சிங்கள மற்றும் தமிழ் பாரம்பரிய பல்வேறு விளையாட்டுகள் நடைபெற்றன.
'அக்னி' இசைக் குழு மற்றும் பிற கலைஞர்களின் நிகழ்ச்சிகள் அடங்கிய இசை நிகழ்ச்சியுடன் மாலையில் இந்நிகழ்வு நிறைவு பெற்றது. இந்த நிகழ்வு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபிஏடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் , வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.