Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st November 2021 18:18:02 Hours

553 வது பிரிகேட் தலைமையக வளாகத்திற்குள் மர நடுகை

இராணுவ தளபதியின் எண்ணக்கருவுக்கமைவான “துரு மித்துரு நவ ரட்டக் திட்டத்தின் கீழ்” 553 வது பிரிகேட் தலைமையக வளாகத்தில் தென்னை, இலுப்பை மரம், நாக மரம், நாவல் மரம், மருத மரம் ,பலா மரக் கன்றுகள் உற்பட 200 மரக் கன்றுகளை நாட்டி வைக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (25) ஆரம்பமானது.

தென்னை பயிர்ச்செய்கை சபை மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் 553 வது படைப் பிரிவினரால் 553 வது படைப் பிரிவின் வளாகத்தினுள் இந்த மர நடுகைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

55 வது படைப்பிரிவுத் தளபதியின் மேற்பார்வையில் 553 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரொஹான் ஜயக்கொடி அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த மர நடுகைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் படையணிகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் 553 வது பிரிகேட் பதவி நிலை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.