23rd October 2022 17:28:59 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழுள்ள 55 வது படைப்பிரிவின் 551 வது பிரிகேட் படையினர் பருத்தித்துறையில் உள்ள கட்கோவளம் மிஷனரி கலவன் தமிழ்ப் பாடசாலையில் உள்ள ஒரு வகுப்பறையை புனரமைத்து அதனை ஒக்டோபர் 19ஆம் திகதி அதிபரிடம் கையளித்தனர்.
55 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன மற்றும் 551 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சிந்தக விக்ரமசிங்க ஆகியோர் இந்த கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
16 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் புனரமைப்பு பணிக்கு தேவையான மனிதவளத்தை வழங்கினர். சமஸ்த லங்கா சாசனரக்ஷக பலமண்டலத்தின் பிரதம செயலாளர் வண. முகுனுவெல அனுருத்த தேரர் இந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்கினார்.
வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.சத்தியபாலன், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.