28th June 2024 08:50:58 Hours
55 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சீ ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 21 ஜூன் 2024 அன்று 55 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்திற்கு முன்பாக அன்னதான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிரேஷ்ட அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சுமார் 2,000 க்கு மேற்பட்ட பிரதேசவாசிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.