24th November 2021 14:54:49 Hours
542 வது பிரிகேடின் 8 வது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 15 வது (தொ) கெமுனு ஹேவா படையணியினர் டெங்கு மற்றும் ஏனைய வைரஸ் நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை (21) முருங்கன் மகா வித்தியாலயத்திலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் சிரமதான திட்டத்தை முன்னெடுத்தனர்.
54 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர ஆசியுடன் 542 வது பிரிகேட் தளபதியின் நெருக்கமான கண்காணிப்பின் கீழ் இத்திட்டத்திற்கு படையினரும் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
542 வது பிரிகேட் தளபதி, 542 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி, 8 வது விஜயபாகு காலாற் படையின் கட்டளை அதிகாரி, 15 (தொ) கெமுனு ஹேவா படையின் கட்டளை அதிகாரி, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த திட்டத்தின் படையினருடன் கைகோர்த்தனர்.