13th May 2024 19:44:54 Hours
54 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கே.எம்.பீ.எஸ்.பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 541 வது பிரிகேடினால் 54 வது காலாட் படைப்பிரிவு மற்றும் அதன் கட்டளை படையலகுகளில் பணிபுரியும் படையினருக்கான அடிப்படை மருத்துவ பாடநெறியை 2024 மே 06 முதல் 2024 மே 11 வரை நடாத்தியது.
40 சிப்பாய்கள் கலந்து கொண்ட பாடநெறி, முதலுதவி, ஆயுர்வேத மருத்துவம் மற்றும் பாம்பு கையாளுதல் பற்றிய அவர்களின் புரிதலை மேம்படுத்துவதாக அமைந்திருந்தது. சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக 541 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிவைசி பெர்னாண்டோ ஆர்டப்ளியூபீ யூஎஸ்பீ அவர்கள் கலந்து கொண்டார். வைத்தியர் லெப்டினன் எஸ்எல்வைஜீ குமார, பல்லேமடு ஆயுர்வேத வைத்தியசாலையின் ஆயுர்வேத வைத்தியர் பீஏ பெர்னாண்டோ, சார்ஜன் எம்ஜீஎன்ஜீ குமார மற்றும் சார்ஜன் பிஏஎம்ஜீஎஸ்ஐஆர்கே அபேசிங்க ஆகியோர் பாடநெறியை நடத்தினர்.