25th March 2024 15:00:31 Hours
54 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கே.எம்.பீ.எஸ்.பி. குலத்துங்க ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மன்னார் தீவில் விசர்நாய்க்கடியை ஒழிப்பதற்கான தடுப்பூசி திட்டத்தை 2024 மார்ச் 12 முதல் 14 வரையான திகதிகளில் 11 வது இலங்கை பீரங்கி படையணி மற்றும் 4 வது விஜயபாகு காலாட் படையணிகளில் நடாத்தினர்.
பொது சுகாதார கால்நடை மருத்துவ சேவைகளின் மருத்துவ ஊழியர்களுடன் இணைந்த இந்த முயற்சியின் போது 253 தெரு நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.