24th May 2025 10:45:15 Hours
21, 54, 56 மற்றும் 59 வது காலாட் படைப்பிரிவுகளின் கீழ் உள்ள படையலகுகளின் படையினருக்காக, 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.சி.பீ. விஜயரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 54 வது காலாட் படைப்பிரிவில் 2025 மே 20 முதல் 22 வரை மூன்று நாள் புகைப்படப் பட்டறை நடாத்தப்பட்டது.
"ரூப சாரிகா" சங்கத்தைச் சேர்ந்த திரு. பிரியந்த அபேசுந்தர மற்றும் அவரது குழுவினரால் நடாத்தப்பட்ட இந்தப் பட்டறை, இராணுவ வீரர்களிடையே படைப்பாற்றல், சுய வெளிப்பாடு மற்றும் புகைப்படத் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
நிகழ்ச்சியின் முடிவில், திரு. அபேசுந்தர மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஒரு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.