18th December 2024 15:09:27 Hours
53 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎச்எம்எஸ் விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 53 வது காலாட் படைப்பிரிவு படையினரால் கரப்பந்து போட்டி 2024 டிசம்பர் 12 முதல் 15 வரை 53 வது காலாட் படைப்பிரிவு கைப்பந்து மைதானத்தில் நடத்தப்பட்டது.
பங்குபற்றிய 16 அணிகளில், போட்டியின் இறுதிப் போட்டியில் 3 வது கஜபா படையணி மற்றும் 6 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி அணிகள் மோதின. சிறப்புமிக்க படைப்பிரிவு தளபதி கரப்பந்து போட்டி 2024 சவால் கிண்ணத்தை" 3 வது கஜபா படையணி பெற்றுகொண்டதுடன், அதே நேரத்தில் 6வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.
இப்போட்டியில் தனிப்பட்ட பாராட்டுக்கள் போட்டி முழுவதும் நிகழ்ச்சிகளை சிறப்பித்தன. 6வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் லான்ஸ் கோப்ரல் ஜேஎன் ஜயசுந்தர சிறந்த அறைதல் வீரராக அங்கீகரிக்கப்பட்டார், அதே நேரத்தில் சிப்பாய் என்எ பகவத்தகே சிறந்த அமைப்பாளர் என்ற பட்டத்தைப் பெற்றார். 3 வது கஜபா படையணியின் சிப்பாய் டிஆர் கபுகமகே தனது சிறந்த பங்களிப்புகளுக்காக போட்டியின் சிறந்த வீரராக கௌரவிக்கப்பட்டார்.