Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th November 2021 18:00:44 Hours

53 வது படைப்பிரிவின் தளபதி எயார் மொபையில் பிரிகேட் மற்றும் அதன் அலகுகளுக்கு விஜயம்

53 வது படைப்பிரிவின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் கே.பி.எஸ்.ஏ பெர்னாண்டோ தனது கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர், கடந்த நவம்பர் 11-13 திகதிகளில் வவுனியா வெள்ளாங்குளத்திலுள்ள எயார் மொபைல் பிரிகேடிற்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.

அவர் தனது விஜயத்தின் போது எயார் மொபையில் பிரிகேட்டின் கீ்ழ் இயங்கும் 24 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, 12 வது இலங்கை சிங்க படையணி , 3 வது கஜபா படையணி, முதலாவது விஜயபாகு கலாட் படையணி மற்றும் 5 வது கெமுனு ஹேவா படையணி ஆகிய இடங்களை பார்வையிட்டார்.

படையணிக்கு வருகை தந்த புதிய தளபதிக்கு, அந்தந்த படையலகுகளின் கட்டளை அதிகாரிகளால் இராணுவ சம்பிரதாயங்களுடன் வரவேற்றதுடன், அவர்களின் வகிபங்கு மற்றும் பணிகள் பற்றிய சுருக்கமான விளக்கங்களும் வழங்கப்பட்டன.

இவ் விஜயமானது கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு அமைவாக மேற் கொள்ளப்பட்டதுடன், 53 வது படைப்பிரிவின் பதவி நிலை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.