27th June 2021 23:43:34 Hours
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 522 வது பிரிகேட் படையினரால் 2021 ஜுன் மாதம் 24 ம் திகதி விடத்தப்பளை மற்றும் எழுதுமட்டுவாழ் ஆகிய பகுதிகளில் வசிக்கும் தேவையுள்ள குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன.
கொவிட் – 19 வைரஸ் பரவல் நிலைமை காரணமாக இப்பகுதியில் நிலவும் குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும், குறைந்த வருமானம் பெருகின்றமையையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கான நிவாரணம் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
7 வது கஜபா படைப்பிரிவினரால் சுகாதார படிமுறைகளை பின்பற்றி குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.