11th October 2024 14:12:00 Hours
இலங்கை இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 52 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் 2024 ஒக்டோபர் 8ம் திகதியன்று இரத்ததான நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலையின் தேசிய இரத்த வங்கியின் வைத்திய ஊழியர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் 150-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.