Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th January 2025 11:00:33 Hours

52 வது காலாட் படைப்பிரிவின் 31 வது தளபதி கடமை பொறுப்பேற்பு

52 வது காலாட் படைப்பிரிவின் 31 வது தளபதியாக மேஜர் ஜெனரல் வி.டி.எஸ். பெரேரா அவர்கள் 2025 ஜனவரி 11 அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின் போது கடமை பொறுப்பேற்றார்.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை பணிநிலை அதிகாரிகள் மரியாதையுடன் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து 52 வது காலாட் படைப்பிரிவு படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

தளபதி தனது புதிய அலுவலகத்தில், மத சம்பிரதாயங்களைத் தொடர்ந்து கடமையை தொடங்குவதைக் குறிக்கும் வகையில் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். பின்னர், இந்நிகழ்வின் அடையாளமாக வளாகத்தில் மரக்கன்று நடுவதற்கு முன், குழுப்படம் எடுத்துக் கொண்டார்.

பின்னர், புதிய தளபதி அனைத்து நிலையினருக்கும் ஆற்றிய உரையின் போது படைப்பிரிவின் எதிர்காலம் குறித்த தனது தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்து கொண்டார். அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்துடன் நிகழ்வு நிறைவடைந்ததுடன், இந்நிகழ்வில் பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.