14th July 2023 21:00:00 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 52 வது காலாட் படைப்பிரிவின் படையினர் எழுதுமட்டுவாழ் வடக்கு ஸ்ரீ ஞானதுர்க்கை அம்மன் கோவிலின் வருடாந்த உற்சவங்களுக்கு முன்னதாக புதன்கிழமை அன்று (12) 52 வது காலாட் படைபிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ வழங்கிய வழிக்காட்டலின் படி சுத்தம் செய்தனர்.
பிரதேசத்தில் வசிக்கும் இராணுவம் மற்றும் தமிழ் சமூகத்தினரிடையே நல்லுறவு உணர்வுகளை மேலும் மேம்படுத்தும் வகையில், படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் திட்டத்தில் பங்குபற்றினர்.