Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th October 2019 10:30:07 Hours

515 ஆவது படைத் தளபதி பதவியேற்பு

பிரிகேடியர் ஏ.எஸ் விக்ரமசேகர அவர்கள் 515 ஆவது படைப் பிரிவின் 31 ஆவது கட்டளை தளபதியாக ஒக்டோபர் மாதம் (30) ஆம் திகதி தனது பதவியை பொறுப்பேற்றார்.

இந்த படைத் தலைமையானது யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் காங்கேசன்துறையில் அமைந்துள்ளது.

புதிதாய் பதவியேற்ற கட்டளை தளபதிக்கு படைத் தலைமையகத்தினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

பின்னர் தலைமையகத்திற்கு வருகை தந்த கட்டளை தளபதி அவர்கள் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொண்டு பின் தனது பணிமனைக்கு சென்று உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு தனது பதவியை பொறுப்பேற்றார்.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். affiliate tracking url | Nike - Shoes & Sportswear Clothing