27th July 2020 18:45:47 Hours
இலங்கை பொறியியல் படையணியைச் சேர்ந்த கேர்ணல் பாலித ஹொடெல்லவத்த அவர்கள் 515 ஆவது படைத் தலைமையகத்தின் 32 ஆவது கட்டளை தளபதியாக இம் மாதம் (22) ஆம் திகதி தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த படைத் தலைமையகமானது வாசவிளான் பகுதியில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 51 ஆவது படைப் பிரிவிற்குரிய தலைமையகமாகும்.
புதிய கட்டளை தளபதியவர்கள் தலைமையகத்திற்கு வருகை தந்த போது படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார்.
பின்னர் தளபதி அவர்கள் தனது பணிமனைக்கு வருகை தந்து சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு தனது புதிய பதவியை கையொப்பமிட்டு பதவியேற்றுக் கொண்டார்.
இச்சந்தர்ப்பத்தில் கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest jordans | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp