06th September 2019 21:09:48 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 515 ஆவது படைத் தலைமையகத்தின் 30 ஆவது கட்டளைத் தளபதியாக கேர்ணல் E.K.W.J விஜயசிறி அவர்கள் இம் மாதம் (2) ஆம் திகதி தனது பதவியை சமய ஆசிர்வாத அனுஷ்டானங்களின் பின்பு பொறுப்பேற்றார்.
அன்றைய தினம் தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய கட்டளைத் தளபதிக்கு படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வரவேற்கப்பட்டார்.
பின்னர் கட்டளைத் தளபதி அவர்களினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை மேற்கொள்ளப்பட்டு தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசார நிகழ்விலும் கலந்து கொண்டார்.
இச்சந்தர்ப்பத்தில் கட்டளை அதிகாரிகள், பதவிநிலை அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். bridgemedia | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals