23rd October 2022 17:32:02 Hours
513 வது பிரிகேடின் இராணுவ புலனாய்வுப் படையினர் மற்றும் 16 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் படையினர் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை காங்கேசன்துறை - மாதகல் கரையோரப் பகுதியில் இருந்து படகில் கொண்டு வரப்பட்ட சுமார் 100 கிலோகிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.
இதன் பெறுமதி சுமார் ரூபா 375,000/= ஆகும். மேலும் படகில் இருந்த சந்தேக நபர் ஒருவர் கடற்கரையை வந்தடையும் போது காணாமல் போயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் படகு ஆகியன விசேட பொலிஸ் அதிரடி படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரிகேடியர் றிஸ்வி ராசிக் அவர்கள் இதனை பிடிப்பதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.