03rd December 2024 02:22:56 Hours
51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிபிள்யூபிஜேகே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கோப்பாய் கிண்ண காற்பந்து போட்டி - 2024 கோப்பாய் சிமிக் பூங்காவில் 30 நவம்பர் 2024 அன்று வெற்றிகரமாக இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிபிள்யூபிஜேகே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் கலந்து கொண்டார்.
ஆறு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் 12 காற்பந்து கழகங்களும் 10 இராணுவ அணிகளும் பங்கேற்றன. உரும்பிராய் காற்பந்தாட்டக் கழகம் சம்பியனாகவும், பலாலி வின்மீன் காற்பந்தாட்டக் கழகம் சிவில் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றன. 51 வது காலாட் படைப்பிரிவு காற்பந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது, அதே நேரத்தில் 513 காலாட் பிரிகேட் இராணுவ பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றது.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், போட்டியாளர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.