Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th February 2024 17:12:21 Hours

5 வது இலங்கை கவச வாகனப் படையணியின் 30 வது ஆண்டு நிறைவு விழா

5 வது இலங்கை கவச வாகனப் படையணி 2024 ஜனவரி 19 ஆம் திகதி படையலகு கருத்தரங்கு, மற்றும் 30 வது ஆண்டு நிறைவு விழா அதிகாரிகளின் ஒன்றுகூடல் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் இலங்கை கவச வாகனப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

கருத்தரங்கின் போது, 5 வது இலங்கை கவச வாகனப் படையணி அதிகாரிகள் தமது விடயங்கள் தொடர்பில் விளக்கக்காட்சிகளை முன்வைத்ததுடன், இரவு உணவு விருந்தின் போது பிரிகேடியர் ஆர்ஜியு ராஜபக்ஷ (ஓய்வு) ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்கள் 'சிவில்-இராணுவ உறவுகளில் இராணுவத்தின் பங்கு' என்ற தலைப்பில் விரிவுரையை வழங்கினார்.

30 வது ஆண்டு நிறைவு விழா அதிகாரிகள் ஒன்று கூடல் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் பங்கேற்புடன் மாலையில் முடிவடைந்தது.