05th December 2024 20:46:42 Hours
4 வது இலங்கை கவச வாகன படையணி படையினரால் திருகோணமலை பிரிதேசத்தில் ஆதரவற்ற குடும்பமொன்றுக்கான புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.
இலங்கை கவச வாகன படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்எஸ் தேவப்பிரிய யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் 27 நவம்பர் 2024 அன்று நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிக்கு உத்தியோகபூர்வமாக வீட்டின் சாவியை கையளித்தார்.
இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துலாஷி மீபாகல அவர்கள் அத்தியாவசிய வீட்டுப் பொருட்களை வழங்கியதுடன், திட்டத்திற்கான நிதி உதவியை சுவிட்சர்லாந்தில் வசிக்கும் நன்கொடையாளர் திரு.பிரபாத் பெரேரா அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், நிதியுதவியாளர்கள், பயனாளிகள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.