Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th October 2024 13:40:19 Hours

4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியினரால் கிரலகொல்லவில் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஎபிஎம் யகாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய, 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் அறிவுறுத்தலுக்கமைய, 641 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில் 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிரலகொல்லவில் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.

4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் பீகே வருவாங்கொடகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ எல்எஸ்சீ அவர்களின் தலைமையில் திரு. வின்சென்ட் சின்னதுரை அவர்கள் வீட்டிற்கு தேவையான நிதி உதவிகளை வழங்கினார்.

அதன்படி நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு, 15 ஒக்டோபர் 2024 அன்று, , மத்திய பாதுகாப்புப் படைத் தளபதி அவர்களால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், குடும்ப உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் கிராமத்தினர் கலந்துகொண்டனர்.