Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th March 2021 12:40:04 Hours

397 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

இன்று (13) காலை நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 297 பேருக்கு கொவிட் – 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 06 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் 291 பேர் உள்நாட்டில் அறியப்பட்டவர்கள் என்பதுடன் இவர்களில் அதிகபடியாக 66 பேர் கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களிலும், 38 பேர் கொழும்பு மாவட்டத்திலும் , 25பேர் இரத்தினபுரி மாவட்டத்திலும், ஏனைய மாவட்டங்களில் 96பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி (13) ஆம் திகதி காலை வரை நாடு முழுவதிலும் மொத்தமாக மரணித்தவர்கள் உட்பட 87,285 தொற்றுள்ளவர்கள் இணங்கானப்படுள்ளதுடன் அவர்களில் 83,440 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணி மற்றும் மினுவான்கொடை பிரெண்டெக்ஸ் ஆடை தொழிற்சாலையுடன் தொடர்புடையவர்களாவர். 83,957 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 2,803 பேர் வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 397 பேர் முழுமையாக சுகமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 24 மணித்தியாளத்திற்குள் கொரோனா தொற்றினால் 05 மரணங்கள் பதிவாகியுள்ளன. மரணித்தவர்கள் றாகமை, ,அக்கறைப்பற்று, மொரடுவை, வத்தளை மற்றும் பொல்கஸ்விட ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அதன்படி (13) காலை வரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 525ஆகும்.

மேலும், (13) காலை நிலவரப்படி முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 104 தனிமைப்படுத்தல் மையங்களில் 10,176 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நேற்று (12) 6,186 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. Buy Kicks | Nike Air Max 270