Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd December 2021 10:30:37 Hours

3 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் பயிற்சி பாடநெறி ஆரம்பம்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 112 வது பிரிக்கேடின் 3 (தொ) இலங்கை சிங்கப் படையணியின் படையலகு பயிற்சி நெறியின் தொடக்க விழா புதன்கிழமை (1) வலமண்டியாவில் உள்ள படையலகு பயிற்சிப் பாடசாலையில் ஆரம்பமானது.

112 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் டி.ஏ.கே திஸாநாயக்க அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடநெறியானது வெற்றிடங்களை நிரப்புவதற்கும், சம்பந்தப்பட்ட படையலகின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் அறிவை விரிவுபடுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டது.

இந் திறப்பு விழாவில் 3 வது இலங்கை இராணுவ சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூ. ஜி.டி.டபிள்யூ.ஏ.எம்.ஆர்.பி.எஸ் போயகொட மற்றும் இப் பயிற்சிப் பாடசாலையின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் லெப்டினன்ட் கேணல் என் டபிள்யூ டி ஏ நாணயக்கார, உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இப் பாடநெறியானது மத்திய பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வடிவமைக்கப்பட்டது. அதற்கமைய 09 அதிகாரிகள் மற்றும் 338 சிப்பாய்களின் பங்குபற்றலுடன் புதன்கிழமை (1) ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப் பாடநெறி 2022 ஜனவரி 19 ஆம் திகதி வரை தொடரும்.