Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th December 2024 20:53:54 Hours

3 வது கவச வாகன படையணியின் 36 வது ஆண்டு நிறைவு விழா

3 வது கவச வாகன படையணி, அதன் 36வது ஆண்டு நிறைவை 16 நவம்பர் 2024 அன்று கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் யுகேகேடபிள்யூஎம்ஆர்ஏடபிள்யூஐஏபி குலத்துங்க பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டாடியது.

அனுராதபுரம் ஜயஸ்ரீ மஹா போதியவில் நடைபெற்ற போதி பூஜையுடன் ஆண்டு நிறைவு விழா ஆரம்பமாகியது, அதனைத் தொடர்ந்து போர் வீரர்களின் நினைவுச் தூபியில் போர்வீரர் நினைவு நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஆண்டு நிறைவு நாளில் கட்டளை அதிகாரி, பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் படையலகு அணிவகுப்பு மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டார். பின்னர் கட்டளை அதிகாரி குழு படம் எடுத்துக்கொண்டதுடன், மரக்கன்று நாட்டினார். அதனைத் தொடர்ந்து அனைத்து நிலையினருடன் ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டார். மதிய உணவுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.