06th March 2024 18:47:11 Hours
24வது டிரகன் வெரியர் திறந்த கராத்தே சாம்பியன்ஷிப் 2024 மார்ச் 02 அன்று சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நாடளாவிய ரீதியில் உள்ள கராத்தே கழகங்களின் பங்கேற்புடன் ஆரம்பமாகியது.
இப்போட்டியின் போது இராணுவ ஆண்கள் அணி 11 தங்கப் பதக்கங்களையும், 1 வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று 12 போட்டிகளை வென்றதுடன் இராணுவ பெண்கள் அணி 5 தங்கப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டது.
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இராணுவ கராத்தே குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் அணிகள் போட்டியில் பங்குபற்றியிருந்தன.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் போட்டியை கண்டுகளித்தனர்.