12th May 2025 15:43:57 Hours
242 வது காலாட் பிரிகேட் படையினர் தங்கள் சிவில் விவகார நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சமூக நலத்திட்டத்தை மேற்கொண்டனர்.
242 வது காலாட் பிரிகேட் படையினர் 2025 மே 08 ஆம் திகதி மிகவும் பிரபலமான மற்றும் முக்கியமான சுற்றுலா தலமான அருகம்பே கடற்கரையில் சிரமதான திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான யூஎஸ்ஏடபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் மேற்பார்வையின் கீழ் இத்திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த நலன்புரி திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதற்காக, 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதியுடன், 242 வது காலாட் பிரிகேடின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இணைந்து இந்த நிகழ்வில் தீவிரமாக பங்கேற்றனர்.