Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th June 2021 14:17:13 Hours

242 வது பிரிகேட் படையினர் பத்து குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் விநியோகம்

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 24 வது படைப்பிரிவின் 242 வது பிரிகேட்டின் 8 வது இலங்கை தேசிய பாதுகாவல் படையின் படையினர் திருக்கோவில் கிராம சேவையாளர் பிரிவின் காஞ்சிரங்குடா கிராமத்தில் கொவிட் தொற்று நிலைமை காரணமாக நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளினால் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ள தகுதியான மக்களின் கஷ்டங்களைத் தணிக்கும் பொருட்டு குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை 2021 மே மாதம் 31ம் திகதி விநியோகித்தனர்.

திட்டத்தின் கீழ் 10 குடும்பங்களுக்கு ரூபா 2500.00 மதிப்புள்ள உலர் உணவு பொதிகள் விநியோகிக்கப்பட்டன.

24 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமிந்த லமாஹேவா, 242 வது பிரிகேட்டின் தளபதி பிரிகேடியர் சந்திக்க பீரிஸ் மற்றும் 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையின் கட்டளை அதிகாரி ஆகியோரின் மேற்பார்வையில் இந்த திட்டத்தை முன்னெடுக்கப்பட்டது.