26th May 2024 16:10:34 Hours
சமூக உணர்வு மற்றும் ஒற்றுமையின் குறிப்பிடத்தக்க வெளிப்பாடாக, 241 வது காலாட் பிரிகேட் தலைமையகம் அக்கரைப்பற்றில் 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் பங்கேற்புடன் வெசாக் கூடு கண்காட்சியை ஏற்பாடு செய்தது.
இந் நிகழ்வானது 24 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எல்.ஏ.சி பெரேரா மற்றும் 241 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்எஸ்டிஎன் பத்திரன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆகியோரின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் 23 மே 2024 அன்று பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் பங்கேற்புடன் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் பெருமளவிலான முஸ்லிம்களும் தமிழ் மக்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.