20th August 2024 19:08:22 Hours
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎல்ஏசீ பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 2024 ஆகஸ்ட் 1 அன்று அம்/உஹான ஆரம்ப பாடசாலை மற்றும் அம்/ஶ்ரீ சுமங்கல வித்தியாலயத்தின் 96 மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட்டது.
இத் திட்டமானது அடிப்படைத் தலைமைப் பண்புகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு மாணவர்களை நம்பிக்கையுடனும், பொறுப்புடனும், பயனுள்ள எதிர்காலத் தலைவர்களாக மாற்றியமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் 24 வது காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மற்றும் குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.