14th November 2024 12:57:52 Hours
24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எல்.ஏ.சி பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலில் இலங்கை கடற்படையினரால் 12 நவம்பர் 2024 அன்று ஒலுவில் துறைமுகத்தில் ஒரு நாள் சிறப்பு அவுட்போர்ட் மோட்டார் படகு பயிற்சி நடாத்தப்பட்டது.
இந்தப் பயிற்சியானது, 24 வது காலாட் படைப்பிரிவு பிரதேசத்தின் பருவமழைக் காலத்திற்கான தேடல் மற்றும் மீட்புக் குழுக்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக நடாத்தப்பட்டது.
இந்த பயிற்சி மோட்டார் படகு இயக்கம், திருத்தல் மற்றும் பல்வேறு நீர் நிலைகளில் கையாளும் நுட்பங்கள் பற்றிய தத்துவார்த்த மற்றும் நடைமுறை பயிற்சிகளை உள்ளடக்கியிருந்தது.
இந்த செயலமர்வில் எட்டு அதிகாரிகள் மற்றும் முப்பத்திரண்டு சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.