31st December 2022 12:33:46 Hours
இலங்கை பீரங்கி படையணியின் பிரிகேடியர் விபுல சந்திரசிறி அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (1) கிழக்குப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் அம்பாறையில் இயங்கும் 24 வது படைப்பிரிவு தலைமையகத்தில் சமய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் புதிய தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 24 வது படைப்பிரிவின் தளபதியை பணிநிலை அதிகாரிகள் அன்புடன் வரவேற்றதை தொடர்ந்து அவருக்கு வளாகத்தின் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
புதிய தளபதி தனது கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
பின்னர், முகாம் வளாகத்தில் மரக்கன்றினை நாட்டினார்
இராணுவ சம்பிரதாயங்களுக்கு இணங்க புதிய தளபதி, அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றினார், தனது உரையில் படைப்பிரிவின் எதிர்காலம் குறித்து தனது கருத்துக்களை முன் வைத்தார்.
இந்த நிகழ்வின் போது பிரிகேட் தளபதிகள், 24 வது படைப் பிரிவின் பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.
பிரிகேடியர் விபுல சந்திரசிறி அவர்கள், தனது புதிய நியமனத்திற்கு முன்னர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தின் பிரதி உபவேந்தராக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.