26th May 2025 15:02:42 Hours
ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ், 2025 மே 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் 24 வது காலாட் படைப்பிரிவு மற்றும் அம்பாறை போர் பயிற்சி பாடசாலையின் படையினருக்கு 'திருப்தியடைந்த மற்றும் துணிச்சலான இராணுவம்' என்ற தலைப்பில் பட்டறை நடாத்தப்பட்டது.
இராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் எதிர்கால பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதும் அவர்களின் உளவியல் ரீதியான மீள்தன்மையை மேம்படுத்துவதும் இந்தப் பட்டறை நோக்கமாக கொண்டிருந்தது. இந்த அமர்வை லெப்டினன் கேணல் ஈ.ஏ.எஸ்.எஸ். சமிந்த மற்றும் மேஜர் எம்.ஐ. மரிக்கார் ஆகியோர் நடாத்தினர். படையினரிடையே மன நல்வாழ்வு மற்றும் தொழில்முறை திருப்தியை மேம்படுத்துவதற்கான மதிப்புமிக்க நுண்ணறிவுகள் மற்றும் உத்திகளை இதன் போது வழங்கினர்.