22nd April 2024 13:50:39 Hours
24 வது காலாட் படைபிரிவு படையினர் வெளிச்செல்லும் 24 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ. சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களுக்கு 2024 ஏப்ரல் 15 ஆம் திகதி படைப்பிரிவில் பிரியாவிடை நிகழ்வை நடாத்தினர்.
வெளிச்செல்லும் தளபதியை நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கி மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன், தளபதி நினைவு சின்னமாக வளாகத்தில் மரக்கன்று நட்டார். படையினருக்கான உரையின் போது, தனது பதவிக் காலத்தில் வழங்கிய உதவிக்காக நன்றி தெரிவித்தார்.
அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்துடன் அன்றைய நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. பிரியாவிடை நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.