Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th December 2024 07:04:44 Hours

24 வது காலாட் படைப்பிரிவினால் வெளிச்செல்லும் தளபதிக்கு பிரியாவிடை

24 வது காலாட் படைப்பிரிவின் வெளிச்செல்லும் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எல்.ஏ.சி பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களுக்கு 29 நவம்பர் 2024 அன்று பிரியாவிடை மரியாதை வழங்கப்பட்டது.

வருகை தந்த தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அதன்பின்னர் குழு படம் எடுக்கப்பட்டதுடன் மரக்கன்று நடப்பட்டது.

அதன்பிறகு, அவர் படையினருக்கு உரையாற்றுகையில் அவரின் பதவிக்காலத்தில் அவரின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்தார். அனைத்துநிலையினருடான தேநீர் விருந்துபசாரத்துடன் அன்றைய நாளின் நிகழ்வுகள் நிறைவுற்றன.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.