25th March 2024 15:46:00 Hours
அம்பாறை காவன்திஸ்ஸ கல்லூரியின் 65 மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி திட்டம் 2024 மார்ச் 14 ஆம் திகதி 24 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் நடாத்தப்பட்டது.
உலகமயமாக்கலுக்கு ஏற்ப ஆற்றல்மிக்க மாணவர்களின் தலைமைத்துவப் பண்புகளை வளர்க்கும் நோக்கில், 24 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ. சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. தலைமைத்துவப் பயிற்சித் திட்டத்தின் கீழ் அர்த்தமுள்ள சுற்றுச்சூழல் உருவாக்கும் வகையில் 65 இலுப்பை மரக் கன்றுகள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.