Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th June 2024 21:15:19 Hours

24 வது காலாட் படைப்பிரிவினரால் அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு மாநாடு

24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎல்ஏசி பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களினால் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் 2024 ஜூன் 03 ஆம் திகதி 24 வது காலாட் படைபிரிவு தலைமையகத்தில் ஒருங்கிணைப்பு மாநாடு முன்னெடுக்கப்பட்டது.

வெள்ளம், வறட்சி, சுனாமி, மனித-காட்டு யானை தாக்குதல் மற்றும் காட்டுத்தீ போன்ற அனர்த்த நிலைமைகள் குறித்து அதிகாரிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்த மாநாட்டின் நோக்கம், எதிர்காலத்தில் மேல் குறிப்பிடப்பட்ட அனர்த்த சூழ்நிலைகளை எதிர்கொள்ளல் மற்றும் பொறிமுறையை உருவாக்குதல் இதன் நோக்கமாகும்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவுகளின் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.