31st August 2020 12:03:17 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 59 ஆவது படைப்பிரிவின் சமூக நலன் சார் திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை 28 திகதி சிலாவத்தை தெற்கு லதானி சிறுவர் இல்ல சிறுவர்களுக்கு மதிய உணவு வழங்கி வைத்தனர்.
59 வது படைப்பிரிவின் தளபதி மற்றும் 591 வது பிரிகேட் தளபதி ஆகியோரின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் 24 வது இலங்கை சிங்க படையினால் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது படையினர் சிறிது நேரம் குறித்த இல்ல சிறுவர்களுடன் செலவிட்டனர். அவர்களில் பெரும்பாலோனர் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் இல்லாதவர்கள்.
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்களின் ஆசீர்வாத்ததுடன் 24வது இலங்கை சிங்க படையின் அதிகாரிகள் மற்றும் படையினர் இந்த திட்டத்தில் பங்கெடுத்தனர். Nike shoes | Nike Off-White