Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24 ஆரம்ப பாடசாலை சிறுவர்களுக்கு கற்றலுக்கான ஊக்கத்தொகை வழங்கள்

வியாழன் (22) 57 வது படைப்பிரிவின் 572 வது பிரிகேட் படையினரின் ஏற்பாட்டில் கொலந்துபிலவு அங்கெய்கத்த ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் 24 வறிய சிறார்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.

ஆரம்ப பாடசாலை உத்தியோகத்தர்களால் இந்த தேவைகள் குறித்து விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்க்கமைய, மேஜர் சமிந்த வன்னியாராச்சி அவர்களின் தலைமையில் 14 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் சிப்பாய்கள் இத்திட்டத்திற்கான அனுசரணையை ஏற்பாடு செய்தனர்.

57 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்திமால் பீரிஸ் அவர்கள் இந்நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறுவர்களுக்குத் பொருட்களை பகிர்ந்தளித்தார்.

இந்நிகழ்வில் 573 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரமித் பிரசன்ன, 572 வது பிரிகேட் தளபதி கேணல் கமல் அமரசிங்க, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.