Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th October 2021 15:30:06 Hours

24வது படைப்பிரிவினரால் வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்கள் வழங்கி வைப்பு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 24 வது படைப்பிரிவினரால் ஜனசக்தி இன்சூரன்ஸ்பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கப்பெற்ற நன்கொடைகளை கொண்டு கல்முனை மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளுக்கு சுமார் 4 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வைத்திய உபகரணங்கள் வியாழக்கிழமை (7) வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய மேற்படி வைத்தியசாலைகளில் கொவிட் -19 சிகிச்சை செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதற்காக 24 வது படைப்பிரிவு தலைமையகத்தினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

24 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சமிந்த லமாஹேவா, 241வது பிரிகேட் தளபதி கேணல் சந்திர அபேகோண், 24 வது படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் அனஸ் அஹமட், 3 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் வீரகோண் ஆகியோரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.