Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th June 2021 15:14:26 Hours

231 வது பிரிகேட் படையினர் மீன்பிடி சமூகத்திற்காக 1000 லிட்டர் குடிநீர் தாங்கி நிறுவல்

இராணுவம் மேற்கொண்ட முயற்சியின் பேரில் மட்டக்களப்பு விஷன் கெயார் நிறுவனத்தின் நன்கொடையில் வெள்ளியன்று (04) சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பு திட்டத்தின் கீழ் புன்னங்குடா மீன்பிடி சமூகம் மற்றும் புன்னாகுடா புண்ணியராமயா விகாரை ஆகியன பயன்படுத்த கூடிய வகையில் 1000 லிட்டர் பிளாஸ்டிக் நீர் தாங்கியினை 231வது பிரிகேட் படையினர் நிறுவினர்.

200 க்கும் மேற்பட்ட மீனவ குடும்ப உறுப்பினர்கள் மற்றும் புன்னகுடா புன்னியராமயா விகாரை ஆகியவற்றிக்கு குடிநீரை வசதி செய்யும் நோக்கத்துடன் இந்த நீர் தாங்கியை மட்டக்களப்பு விஷன் கெயார் நிறுவன் 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியராச்சி அவர்களின் வேண்டு கோளிட்கு இணங்க வழங்கியது.

நன்கொடை வழங்கலின் போது 231வது பிரிகேட் அதிகாரிகள், புண்ணியராமய விகாரையின் தலைமை தேரர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.