18th October 2024 21:41:44 Hours
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் 2024 ஒக்டோபர் 16 ஆம் திகதி பளை ஆரம்ப வைத்தியசாலையில் இருந்து பச்சாவில் உள்ள பிரதேச செயலாளர் அலுவலகம் வரை புற்றுநோய்க்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு நடைப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, 23 வது கெமுனு ஹேவா படையணி படையினர் ஏனைய அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து நடைபவனியில் கலந்துகொண்டனர்.
மேலும் படையலகினால் பங்கேற்பாளர்களுக்கு குடிநீர் நிலையத்தையும் ஏற்பாடு செய்திருந்தது.
படையினரின் பங்கேற்பு மற்றும் பிற வழங்கல் ஏற்பாடுகள் 52 வது காலாட் படைப்பிரிவின் கட்டளையின் கீழ் 522 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.