15th October 2024 12:40:27 Hours
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 23 வது கெமுனு ஹேவா படையணி படையினரின் ஏற்பாட்டில் 2024 ஒக்டோபர் 10 ம் திகதியன்று விநாயகர் பாலர் பாடசாலையின் 18 சிறார்களுக்கு விசேட மதிய உணவு வழங்கப்பட்டது, இந்த திட்டம் 23 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எச்ஜீடிஜே ஹபுருகல அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.