17th November 2023 05:05:58 Hours
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது காலாட் படைப்பிரிவு மற்றும் அதன் படையலகுகளின் படையினருக்கு இராணுவ கணக்கியல் நடைமுறைகள் தொடர்பான செயலமர்வு 2023 நவம்பர் 14 அன்று நடாத்தப்பட்டது.
இச் செயலமர்வு பூனானி 23 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் நடைபெற்றதுடன், கணக்கியல் நடைமுறைகள் தொடர்பான அவர்களின் புரிதலை மேம்படுத்துவதும் அதுதொடர்பான பூரண அறிவை வழங்குவதையும் நோக்கமாக கொண்டிருந்தது.
இச் செயலமர்வு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கணக்கியல் அதிகாரி மேஜர் எம்.யூ.ஐ.சீ குணவர்தன பீஎஸ்சீ மற்றும் அவரது குழுவினரால் நடாத்தப்பட்டது. இச் செயலமர்வில் குறிப்பாக அந்தந்த படைப் அமைப்புகளின் நிதி எழுதுவினைஞர்கள் கலந்துகொண்டனர்.
மொத்தம் 70 நிதி எழுதுவினைஞர்கள் இச் செயலமர்வில் கலந்துகொண்டு இராணுவ கணக்கியல் நடைமுறைகள் தொடர்பாக அறிவை பெற்று கொண்டனர்.
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ மற்றும் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோர் வழிகாட்டுதல்களை வழங்கினார்.