10th August 2024 12:56:38 Hours
பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது மற்றும் அதன் தற்போதைய சட்டக் கட்டமைப்பை மையமாகக் கொண்ட விரிவுரை 07 ஆகஸ்ட் 2024 அன்று 23 வது காலாட் படைப்பிரிவில் நடைபெற்றது.
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் பணியகத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமுத்திர நிலாந்தி அவர்களினால் இந்த அமர்வு நடத்தப்பட்டது. சிறுவர் துஷ்பிரயோகம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, குடும்ப வன்முறை மற்றும் அதன் தொடர்பான சட்டங்கள் உட்பட பல்வேறு வகையான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் படையினருக்குக் கற்பிப்பதே இத் விரிவுரையின் நோக்கமாகும்.
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீ காரியவசம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இவ் விரிவுரை நடத்தப்பட்டது. இவ் விரிவுரையில் 08 அதிகாரிகள் மற்றும் 140 சிப்பாய்கள் கலந்தகொண்டனர்.