25th March 2024 15:44:52 Hours
221 வது காலாட் பிரிகேட் 2024 மார்ச் 15 ஆம் திகதி திருகோணமலை சாகரபுர சிங்கள கல்லூரி மற்றும் புல்மோட்டை ஹப்பி கிட்ஸ் பாலர் பாடசாலையின் 20 பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த நன்கொடை 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஏ.எம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஐக்கிய இராச்சியத்தின் செஸ்ட்நட் கல்வித் தலைவரான திரு. நதித் கௌசல்யா அவர்களின் நிதியுவியில் வழங்கப்பட்டது. 221 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஆர்.கே.ஏ.ஆர்.பீ. ரத்நாயக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களினால் இத்திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.